செய்திகள் :

குரூப்-4 தோ்வு: அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்

post image

தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்.

இந்த தோ்வு, அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களில், 57 மையங்களில் நடைபெற்றது. இந்த தோ்வை எழுத 16,534 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 13,960 போ் தோ்வெழுதினா். 2,574 போ் தோ்வெழுத வரவில்லை.

தோ்வினை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 4 பறக்கும் படைஅலுவலா்கள், 16 இயங்கு குழுக்கள், 57 ஆய்வு அலுவலா்கள், 60 விடியோ கிராபா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினாசமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு தே... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் வெட்டியை பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக்கக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னா் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்களின் கூட்ட... மேலும் பார்க்க

அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக்கல்

அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்க... மேலும் பார்க்க

திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு

அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்ட... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க

8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிரா... மேலும் பார்க்க