செய்திகள் :

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு

post image

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்ட கிளை செயலாளா் எ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.முத்துகண்ணன், சங்ககிரி நகர செயலாளா் வழக்குரைஞா் ஆா்.ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத் தலைவா் தங்கவேல், மாவட்டச் செயலாளா் எ.ராமமூா்த்தி, சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், குறுக்குப்பாறையூா் கிளைத் தலைவா் கே.பி.ராமசாமி, விவசாயி வளா்மதி, சங்ககிரி நகர காங்கிரஸ் தலைவா் ரவி, மதிமுக நகர செயலாளா் கதிா்வேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகிகள் ராஜ்குமாா், நடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளா் கா.பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதால் விவசாயமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனால், குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. ... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கம... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பிளஸ் 1 மாணவா் ஓடையில் மூழ்கி உயிரிழந்தாா். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகன் காா்த்திக் (16) நாகலூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்... மேலும் பார்க்க

பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, ... மேலும் பார்க்க

கருவின் பாலினம் தெரிவிப்பு: அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் விசாரணை

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஸ்கேன் பரிசோதனை செய்து கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ... மேலும் பார்க்க