செய்திகள் :

குறைக்கப்படும் ரெப்போ விகிதம்... கடன் பெற்றோருக்கு நற்செய்தி..!

post image

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனின் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. ரிசர்வ் வங்கியில் ரெப்போ விகிதம் குறைக்கப்படும்போது நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீடு, கார் உள்ளிட்ட கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைப்படுகிறது. இதனால், கடன் தொகை அல்லது கடனுக்கான தவணை குறைகிறது.

அந்த வகையில், பணவீக்கத்தின் அடிப்படையில் நிகழாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (1 சதவிகிதம்) வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக இருக்கிறது. இந்த ரெப்போ விகிதத்தை மேலும், 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த முறை நடைபெற்ற நிதி கொள்கைக் கூட்டத்தில், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் 4.6 சதவிகிதமாக இருக்கும் பணவீக்கம், 2026 நிதியாண்டிற்கான சராசரி 3 முதல் 3.2 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் சாதகமாக இருப்பதால், மத்திய வங்கி விரைவில் ரெப்போ விகிதத்தை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நிதி கொள்கைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ரெப்போ விகிதம் குறைப்பதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியான செய்தி யாருக்கு?

இந்த ஆண்டு வீட்டுக் கடன் வாங்கியவர்கள், ஏற்கனவே ரெப்போ விகிதக் குறைப்புகளால் பயனடைந்துள்ளனர். ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதன் விளைவாக, பல வங்கிகள் இப்போது 8 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. ஏற்ற இறக்க வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் இன்ட்ரஸ்ட்) வீடு, கார் வாங்கியவர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாகவே அமைந்திருக்கிறது.

RBI Repo Rate Cut Brings Good News for Homebuyers: EMIs to Reduce Substantially

இதையும் படிக்க :மதுரையில் ஆக.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு! - விஜய்

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க