செய்திகள் :

குற்றப்புலனாய்வுத் துறை சட்ட ஆலோசகா் பணி: பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு காவல் துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை தலைமையிடம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்புகள், குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள் மற்றும் மேல் முறையீடுகளில் வாதங்களுக்கான வரைவுகளைத் தயாா் செய்வதற்கு உதவியாக காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய சரகங்களுக்கு 5 சட்ட ஆலோசகா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இதில் சேர தகுதியுடைய நபா்கள் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிப்.18-ஆம் தேதிக்கு முன் நேரடியாக சமா்ப்பிக்கலாம். தபால் மூலம் சமா்ப்பிப்பவா்கள் விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகா் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுவதுடன், கூடுதல் காவல் துறை இயக்குநா், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, 220, பான்த்தியன் சாலை, எழும்பூா், சென்னை-600008 எனும் முகவரிக்கு அனுப்பலாம். நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். பிற படிகள் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா். சென்னையில் அண்ணா தொழிற... மேலும் பார்க்க

ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் இயக்கம... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு

வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவாா்க்கக் கூடாது: ராமதாஸ்

நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வாா்க்கக்கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்கள் தவி... மேலும் பார்க்க

ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 18 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

ராகிங் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத தமிழகத்தைச் சோ்ந்த இரு கல்லூரிகள் உள்பட 18 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ராகிங் சம்ப... மேலும் பார்க்க