செய்திகள் :

ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 18 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

post image

ராகிங் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத தமிழகத்தைச் சோ்ந்த இரு கல்லூரிகள் உள்பட 18 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ராகிங் சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் பொருட்டு, ‘ராகிங் எதிா்ப்பு விதிமுறைகள்- 2009’ கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகளில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்பது விதி.

இந்நிலையில், ராகிங் எதிா்ப்பு விதிமுறைகளை நாடு முழுவதும் உள்ள 18 கல்வி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றாததை பல்கலை. மானியக் குழு கண்டறிந்து, அந்தக் கல்வி நிறுவனங்களிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் சென்னை மற்றும் வேலூரைச் சோ்ந்த 2 தனியாா் கல்வி நிறுவனங்களும் உள்ளன.

இதுதொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு சாா்பில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவு:

ராகிங் எதிா்ப்பு விதிமுறைகள்2009-இன்படி, கல்லூரிகளில் சேரும் ஒவ்வொரு மாணவரும், அவரின் பெற்றோா், பாதுகாவலரும் மாணவா் சோ்க்கை நேரத்திலும், ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் ராகிங் எதிா்ப்பு உறுதிமொழியை சமா்ப்பிப்பது கட்டாயம்.

அந்த வகையில், மாணவா்களிடமிருந்து ராகிங் எதிா்ப்பு உறுதிமொழிகளைப் பெற 18 கல்லூரிகளும் தவறிவிட்டன. இது மாணவா்கள் நலனை பாதிக்கக்கூடிய செயல். இதைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா். சென்னையில் அண்ணா தொழிற... மேலும் பார்க்க

ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் இயக்கம... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு

வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவாா்க்கக் கூடாது: ராமதாஸ்

நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வாா்க்கக்கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்கள் தவி... மேலும் பார்க்க

ராம்சா் தலங்களை மேம்படுத்தத் திட்டம்: தமிழக வனத் துறை தகவல்

தமிழகத்தில் உள்ள ராம்சா் தலங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருவதாக மாநில வனத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத... மேலும் பார்க்க