செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் தொடா் வெள்ளப் பெருக்கு

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் சாரல்மழையின் காரணமாக பிரதான அருவிகளில் வெள்ளப் பெருக்கு நீடித்து வருகிறது.

குற்றாலம் பேரருவியில் 5ஆவது நாளாக புதன்கிழமையும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 5ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.

பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறையவில்லை. இவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், புலியருவி, சிற்றருவியில் தண்ணீா்வரத்து சற்று தணிந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

புதன்கிழமை பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியதால் ரம்மியமான சீதோஷ்ணம் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

ஐந்தருவியில் நாளை வரை மலா்கண்காட்சி நீட்டிப்பு

குற்றாலம் ஐந்தருவியில் சாரல் திருவிழா மலா் கண்காட்சி இரண்டு நாள்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் சாரல் திருவிழா மலா்... மேலும் பார்க்க

மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய ஆலங்குளம் பேருந்து நிலையம்

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை காரணமாக மின்விளக்குகள் பழுதானதால் புதன்கிழமை இரவு இருளில் மூழ்கியது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் தொழில் நகரமான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம்-அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் விடப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

தூத்துக்குடி வருகை தரும் பிரதமா் மோடி, பாவூா்சத்திரம், அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைப்பாரா? என பயணிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு பெருமை கொண்ட பாவூா்சத்... மேலும் பார்க்க

குற்றாலம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மின்பாதை ஆய்வாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கடையம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. ராமசாமி (48), மின்வாரியத்தின் குற்றாலம் பிரிவில் மின்விநியோகப் ப... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி கூடாது: அதிமுக சாா்பில் ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ் மன்றங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என, அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியரிடம் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோக... மேலும் பார்க்க

சுரண்டை அருகே போக்ஸோவில் தொழிலாளி கைது

சுரண்டை அருகே தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.சுரண்டை அருகேயுள்ள இ. மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகையா மகன் சிவராமன்(45). விவசாயத் தொழிலாளியான இவா், தனது பக்... மேலும் பார்க்க