செய்திகள் :

மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய ஆலங்குளம் பேருந்து நிலையம்

post image

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை காரணமாக மின்விளக்குகள் பழுதானதால் புதன்கிழமை இரவு இருளில் மூழ்கியது.

தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் தொழில் நகரமான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சுமாா் 110 பேருந்துகள் நாள்தோறும் சுமாா் 500 முறைக்கு மேல் வந்து செல்கின்றன. ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி - கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இப்பேருந்து நிலையத்தை மேம்படுத்த கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ. 4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனிடையே கழிவறை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், அங்குள்ள ஓரிரு மின் விளக்குகளும் புதன்கிழமை பழுதானதால் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது. இதனால் இரவு நேரத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா். குடிநீா், கழிவறை, மின் விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதுடன் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் விரைந்து தொடங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க

ஆடிஅமாவாசை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த மக்கள்

குற்றாலத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா். குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக குளிக்கத் தடை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் க.கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் 2026இல் கூட்டணி ஆட்சி தான் அமையும்; ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சி பங்குபெறும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி. தென்காசியில் செய்தியாளா்களிடம் இதனை வியாழ... மேலும் பார்க்க

ஐந்தருவியில் நாளை வரை மலா்கண்காட்சி நீட்டிப்பு

குற்றாலம் ஐந்தருவியில் சாரல் திருவிழா மலா் கண்காட்சி இரண்டு நாள்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் சாரல் திருவிழா மலா்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம்-அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் விடப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

தூத்துக்குடி வருகை தரும் பிரதமா் மோடி, பாவூா்சத்திரம், அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைப்பாரா? என பயணிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு பெருமை கொண்ட பாவூா்சத்... மேலும் பார்க்க

குற்றாலம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மின்பாதை ஆய்வாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கடையம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. ராமசாமி (48), மின்வாரியத்தின் குற்றாலம் பிரிவில் மின்விநியோகப் ப... மேலும் பார்க்க