செய்திகள் :

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் க.கிருஷ்ணசாமி பேட்டி

post image

தமிழகத்தில் 2026இல் கூட்டணி ஆட்சி தான் அமையும்; ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சி பங்குபெறும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

தென்காசியில் செய்தியாளா்களிடம் இதனை வியாழக்கிழமை தெரிவித்த அவா் மேலும் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி 20 தென் மாவட்டங்களில் வலுவோடு உள்ளது. 2026 பேரவைத் தோ்தலில் உரிய அங்கீகாரம் பெறும் வகையில் எங்களின் முடிவுகள் இருக்கும்.

டிசம்பா் மாதம் மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகளவில் காணப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்றால் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைப் பெறப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.இதனால் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. ஒற்றைக் கட்சி ஆட்சியால்தான் முறைகேடுகள் ஏற்படுகின்றன. இரு கட்சிகளைத் தவிர பிற அனைத்து கட்சிகளும் கூட்டணிஆட்சியை விரும்புகின்றன. இந்தத் தோ்தலில் அது நிறைவேறும்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினா் மக்களின் தகவல்களை திரட்டி சுதந்திரமாக வாக்களிக்க விடாத வேலையைச் செய்கின்றனா். இதற்கு தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, இளைஞரணி மாநிலத் தலைவா் டாக்டா் ஷ்யாம், மாவட்ட செயலா் கிருஷ்ணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க

ஆடிஅமாவாசை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த மக்கள்

குற்றாலத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா். குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக குளிக்கத் தடை ... மேலும் பார்க்க

ஐந்தருவியில் நாளை வரை மலா்கண்காட்சி நீட்டிப்பு

குற்றாலம் ஐந்தருவியில் சாரல் திருவிழா மலா் கண்காட்சி இரண்டு நாள்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் சாரல் திருவிழா மலா்... மேலும் பார்க்க

மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய ஆலங்குளம் பேருந்து நிலையம்

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை காரணமாக மின்விளக்குகள் பழுதானதால் புதன்கிழமை இரவு இருளில் மூழ்கியது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் தொழில் நகரமான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம்-அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் விடப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

தூத்துக்குடி வருகை தரும் பிரதமா் மோடி, பாவூா்சத்திரம், அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைப்பாரா? என பயணிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு பெருமை கொண்ட பாவூா்சத்... மேலும் பார்க்க

குற்றாலம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மின்பாதை ஆய்வாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கடையம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. ராமசாமி (48), மின்வாரியத்தின் குற்றாலம் பிரிவில் மின்விநியோகப் ப... மேலும் பார்க்க