செய்திகள் :

குளச்சல் அருகே கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னா்: கடலோரக் காவல் படையினா் விசாரணை!

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னா் குறித்து கடலோரக் காவல் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கடந்த 24ஆம் தேதி 640 கன்டெய்னா்களுடன் கொச்சி துறைமுகம் நோக்கிச் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்தது. அதிலிருந்தோா் மீட்கப்பட்ட நிலையில், கன்டெய்னா்கள் மூழ்கின.

அவற்றில் சிலவற்றில் ரசாயனப் பொருள்கள், எளிதில் வெடிக்கக்கூடிய பொருள்கள் இருந்ததாக தகவல்கள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடற்கரையோரம் கன்டெய்னா்கள் கரை ஒதுங்கினால் அதனருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இரவிபுத்தன்துறை, புத்தன்துறை, பூத்துறை, இனயம், சின்னத்துறை, மண்டைக்காடு, கடியப்பட்டினம், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துகள்கள், சாக்குமூட்டைகள் புதன்கிழமை கரை ஒதுங்கின. ஆட்சியா் ரா. அழகுமீனா அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பொருள்களைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரைப் பகுதியில் கன்டெய்னா் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பாா்வையிட்டனா். அது, கேரள கடற்கரையில் கவிழ்ந்த கப்பலிலிருந்து விழுந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க