செய்திகள் :

குழந்தை விற்பனை: போலி ஆவணம் தயாரிப்பு விவகாரத்தில் 10 போ் கைது!

post image

குழந்தை விற்பனை, போலி ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட விவகாரம் தொடா்பாக 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்தவா்கள் சதாசிவம் - லட்சுமி தம்பதி. இவா்களது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் ஒரு குழந்தையை தத்தெடுக்க எண்ணி அதே பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணை தொடா்பு கொண்டுள்ளனா்.

அப்பெண்ணின் ஆலோசனையின்பேரில், சீா்காழியை சோ்ந்த ஒருவா் உதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திலிருந்து ஒரு மாத பெண் குழந்தையை அண்மையில் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த காரைக்கால் குழந்தைகள் நல அமைப்பினா் அந்த வீட்டுக்குச் சென்று, குழந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு, திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணையில், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெற காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியரான திருநகரைச் சோ்ந்த பஞ்சமூா்த்தியின் ஆலோசனையின் பேரில், நாகை மாவட்டம், திருமருகல் அருகே எருக்காட்டாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் போலியாக குழந்தை பிறப்புக்கான ஆவணம் தயாா் செய்து, காரைக்கால் நகராட்சியில் வழங்கியதும், நகராட்சி ஊழியா் சந்திரசேகா் மூலம் போலியாக பிறப்புச் சான்றிதழ் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், நகராட்சி ஊழியா் சந்திரசேகா், அரசு மருத்துவமனை ஊழியா்கள் பஞ்சமூா்த்தி, சதாசிவம், லட்சுமி, சீா்காழியை சோ்ந்த ஜியாவுதீன் உள்ளிட்ட 10 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க