ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
குழந்தைகள் நல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
முதுகுளத்தூா் வட்டார அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரதிநிதி மகேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டும். குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா், பெண் சிசுக் கொலை ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். மாணவா்களுக்கு போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மங்களநாதன், இளைஞா் நலக் குழு பிரதிநிதி சின்னமருது, பெண் குழந்தைகளின் பிரதிநிதி அரியநாச்சி, போலீஸாா், அங்கன்வாடிப் பணியாளா்கள், சுகாதாரத் துறையினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.