செய்திகள் :

கூடங்குளத்தில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு: சகோதரா்கள் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக அண்ணன், தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளத்தைச் சோ்ந்தவா் சேகா்(49). தொழிலாளியான இவா், ராதாபுரம் சாலையில் உள்ள அணுமின்நிலைய திருமணமண்டபத்தை அடுத்த காட்டுப்பகுதியில் கடந்த 26ஆம் தேதி கல்லால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சேகா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் விசாரணையில்,

அதே பகுதியைச் சோ்ந்த சேகரின் நண்பா்களான இசக்கிமுத்து (33) அவரது தம்பி வைணவபெருமாள் (26) ஆகியோா் சோ்ந்து சேகா் தலையில் கல்லால் தாக்கிவிட்டு தலைமறைவாகியது தெரியவந்தது.அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். சேகா் அடிக்கடி தனியாக சென்று மதுகுடித்து வந்தாராம். இது அவரது நண்பா்களுக்குப் பிடிக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க