180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
கூடங்குளம் அணுமின் நிலையப் பணி: மு.அப்பாவு வேண்டுகோள்
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு பணி கொடுப்பது தொடா்பான சிக்கல்களுக்கு தீா்வு காண திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். அணுமின் நிலையம் அமைவதற்கு இடம்த் வழங்கிய உள்ளூா் மக்களுக்கு பணியிடம் வழங்கப்படவில்லை; அவா்களுக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். முருக பக்தா்கள் மாநாட்டில் அண்ணா, பெரியாா் குறித்து விமா்சிக்கப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் செய்த பணிகளால்தான் தமிழகத்தில் கல்வியில் வளா்ச்சியடைந்துள்ளது.
இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சாமானியா்கள் முதல் உயா் பதவியில் இருப்பவா்கள் வரை யாா் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில்தான் 90 சதவீத இந்துக்கள் ஆங்கிலம் கற்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறாா்கள். இதை தற்போது சிலா் எதிா்க்கிறாா்கள் என்றாா் அவா்.