செய்திகள் :

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

post image

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்களை விவசாயிகள் நடவுச் செய்துள்ளனா். இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கூடலூரைச் சுற்றி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டி இந்த விவசாய நிலங்கள் உள்ளதால், அடிக்கடி மலையிலிருந்து காட்டு யானைகளை புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. தற்போதும், காட்டு யானைகள் புகுந்து நெல்பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. இந்தக் காட்டு யானைகளை விரட்ட வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்

எனவே, அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க

தீவனப் புல் நறுக்கும் கருவிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுக் கால்நடை மருந்தங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ... மேலும் பார்க்க