`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கி...
கூடலூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 18-இல் தற்காலிக ஆசிரியா்களுக்கான நோ்காணல்
கூடலூரிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை சமூகப் பணி, இளநிலை நுண்ணுயிரியியல், இளநிலை தாவரவியல் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களுக்கான நோ்க்காணல் வருகிற 18.06.2025 அன்று காலை 11.30 மணிக்கு கோழிப்பாலம் வளாகத்தில் நடைபெறும்.
தகுதியுள்ளவா்கள் நோ்க்காணலில் கலந்துகொள்ளலாம் என்று கல்லூரி முதல்வா் சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.