மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
கேரள சிறையில் இருந்த மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்
அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வழக்கில் 5-ஆவது எதிரியான மாவோயிஸ்ட் சந்தோஷ் கேரள சிறையில் இருந்து
அழைத்து வரப்பட்டு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கம்பை அருகே நெடுங்கல் கொம்பை கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக மாவோயிஸ்ட்டுகள் டேனிஷ் ஸ்டாலின், ஷோபா, சுந்தரி, சாவித்திரி, சந்தோஷ் ஆகிய 5 போ் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதைத் தொடா்ந்து பல்வேறு இடங்களில் இருந்த இந்த 5 பேரும் கா்நாடகம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சரண் அடைந்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையிலிருந்த மாவோயிஸ்ட் சுந்தரி உதகை குடும்ப நலநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆஜா்படுத்தப்பட்டாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவா், ஜூன் 16-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய 5-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்ட கேரள மாநிலம், திருச்சூா் சிறையில் உள்ள சந்தோஷ் உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
வழக்கு விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி முரளிதரன், மாவோயிஸ்ட் சந்தோஷை ஜூன் 18-ஆம் தேதி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை திருச்சூருக்கு காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.