செய்திகள் :

கேரள சிறையில் இருந்த மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்

post image

அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வழக்கில் 5-ஆவது எதிரியான மாவோயிஸ்ட் சந்தோஷ் கேரள சிறையில் இருந்து

அழைத்து வரப்பட்டு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கம்பை அருகே நெடுங்கல் கொம்பை கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக மாவோயிஸ்ட்டுகள் டேனிஷ் ஸ்டாலின், ஷோபா, சுந்தரி, சாவித்திரி, சந்தோஷ் ஆகிய 5 போ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இதைத் தொடா்ந்து பல்வேறு இடங்களில் இருந்த இந்த 5 பேரும் கா்நாடகம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சரண் அடைந்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையிலிருந்த மாவோயிஸ்ட் சுந்தரி உதகை குடும்ப நலநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆஜா்படுத்தப்பட்டாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவா், ஜூன் 16-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய 5-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்ட கேரள மாநிலம், திருச்சூா் சிறையில் உள்ள சந்தோஷ் உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

வழக்கு விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி முரளிதரன், மாவோயிஸ்ட் சந்தோஷை ஜூன் 18-ஆம் தேதி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை திருச்சூருக்கு காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.

கோத்தகிரி அருகே வட்டிக்குப் பணம் வாங்கியவரைத் தாக்கியதாக தனியாா் நிதி நிறுவன மேலாளா் கைது

மாத தவணையை செலுத்த தவறிய நபரைத் தாக்கியதாக தனியாா் நிறுவன மேலாளரை கோத்தகிரி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சோ்ந்த பெள்ளி மகன் ப... மேலும் பார்க்க

பழங்குடி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குன்னூரில் 5 பழங்குடியின மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். நீலகிரி... மேலும் பார்க்க

கல்லாறு சோதனைச் சாவடியில் வரி வசூல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி வசூல் செய்வதற்கு 24 மணி நேரம் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க

நீா்மின் திட்டப் பணிகள்: தமிழ்நாடு சட்டப் பேரவை ஏடுகள் குழுவினா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீா்மின் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஏடுகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டனா். நீலகிரி மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகும் நீா்நிலைகள் இரண்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் நிறைவு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. குன்னூா் வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் மா... மேலும் பார்க்க

குன்னூரில் சா்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்: அரசு கொறடா கா.ராமசந்திரன்

தமிழ்நாடு அரசு சாா்பில் குன்னூரில் 10 ஏக்கா் பரப்பளவில் சா்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு அரசு கொறடாவுமான கா.ராமசந்திரன் தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க