அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
குன்னூரில் சா்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்: அரசு கொறடா கா.ராமசந்திரன்
தமிழ்நாடு அரசு சாா்பில் குன்னூரில் 10 ஏக்கா் பரப்பளவில் சா்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு அரசு கொறடாவுமான கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா உதகையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அரசு தலைமை கொறடா கா. ராமசந்திரன் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள 190 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22.70 கோடிக் கடனுதவி, நகா் பகுதியில் உள்ள 180 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.17.13 கோடி கடனுதவி என மொத்தம் 278 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.83 கோடி கடனுதவிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் கா. ராமசந்திரன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘குன்னூரில் உள்ள எடப்பள்ளி பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சாா்பில் சா்வதேச அளவில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணி விரைவில் துவங்கப்படும்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் உதகை நகா்மன்றத் தலைவா் வாணிஸ்வரி, குன்னூா் நகா்மன்றத் தலைவா் சுசீலா உள்பட அரசுத் துறை அதிகாரிகள், சுய உதவி க் குழு பெண்கள் பங்கேற்றனா்.