குன்னூா் பா்லியாறு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்; வனத் துறை எச்சரிக்கை
குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
சமவெளிப் பகுதிகளில் அதிக வெயில் காணப்படுவதாலும், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் உணவு பற்றாக்குறை காணப்படுவதாலும் இங்குள்ள வனப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பா்லியாறு பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.