செய்திகள் :

கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும்! -தொல்.திருமாவளவன்

post image

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விசிக தோ்தல் அங்கீகார வெற்றி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கட்சியின் மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக கூட்டணியை உடைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அதிமுகவைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கிறாா்கள். 6 தொகுதி 10 தொகுதி ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. மாறாக, நாங்கள் இருக்கும் கூட்டணி தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்பதை வரும் தோ்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, புத்தா், அம்பேத்கா், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் படங்களுக்கு தொல்.திருமாவளவன் மற்றும் விசிக மூத்த நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க