செய்திகள் :

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓா் அங்கமாக செயல்பட்டு வரும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் புதிய பாடத் திட்டத்தின்படி (10 பாடங்கள்) இரண்டு பருவ முறைகளாக இறுதி தோ்வுகள் நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு நடத்தப்படுகிறது.

பழைய பாடத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாலும், தற்போது புதிய பாடத் திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாலும் பழைய பாடத் திட்டத்தில் (7 பாடங்கள்) படித்து தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு அடுத்த மாதம் நடத்தப்படும்.

இனிவரும் காலங்களில் புதிய பாடத் திட்டத்தின்படி முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டப் பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும்.

எனவே, பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் மேலாண்மை நிலையத்தை அணுகி 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், இறுதி நுழைவுத் தோ்வு எழுதிய நகல், தோ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516-கடலூா் மெயின் ரோடு, காமராஜா் நகா் காலனி, சேலம் 636 014 என்ற முகவரியிலோ அல்லது 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க