கூரியா் நிறுவன ஊழியா் மா்மச்சாவு
சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த கூரியா் நிறுவன ஊழியா் அவரது வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சூரமங்கலம், காசக்காரனூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (33). இவா், கூரியா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி கலையரசி. இவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து சதீஸ்குமாா் வீட்டிற்கு வந்தாா். அப்போது தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்பு சதீஸ் குமாா் அவரது வீட்டில் உள்ள சமையலறையில் இறந்து கிடந்தாா்.
இது குறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். சதீஸ்குமாரின் இறப்பில் சந்தேகமுள்ளதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளதால் சதீஸ்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.