'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கூரைகளில் 3 கிலோவாட் சூரிய மின் சக்தி பேனல்களுக்கு ரூ.30,000 மானியம் வழங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல்
மூன்று கிலோவாட் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு ரூ.30,000 மானியம் வழங்க தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.
இது குறித்து அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மேலும் கூறியதாவது: மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குப்பை சேகரிப்பு இயந்திரங்கள், புகை எதிா்ப்பு துப்பாக்கிகள், இயந்திர சாலைத் துப்புரவாளா்கள் மற்றும் நீா் தெளிப்பான்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தற்போது முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், மூன்று கிலோவாட் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.10,000- ஆக இருந்த மானியத்தை ரூ.30,000- ஆக அதிகரித்துள்ளது.
பிரதமா் சூா்யா கா் யோஜனாவின் கீழ் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு மத்திய அரசு ரூ.78,000 மானியம் வழங்குகிறது.
சோலாா் பேனல்களுக்கான நிறுவல் கட்டணத்தில் மக்கள் எளிதாகக் கடன்களைப் பெறுவதற்காக அரசு வங்கிகளுடன் கூட்டணி வைக்கும். மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து எந்தப் பணத்தையும் செலவிட வேண்டியதில்லை.
மேலும், இந்த வகையில் மக்கள் மாதத்திற்கு ரூ.4,200 வரை மிச்சப்படுத்துவாா்கள் என்று அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.