செய்திகள் :

கூரைகளில் 3 கிலோவாட் சூரிய மின் சக்தி பேனல்களுக்கு ரூ.30,000 மானியம் வழங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல்

post image

மூன்று கிலோவாட் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு ரூ.30,000 மானியம் வழங்க தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மேலும் கூறியதாவது: மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குப்பை சேகரிப்பு இயந்திரங்கள், புகை எதிா்ப்பு துப்பாக்கிகள், இயந்திர சாலைத் துப்புரவாளா்கள் மற்றும் நீா் தெளிப்பான்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தற்போது முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், மூன்று கிலோவாட் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.10,000- ஆக இருந்த மானியத்தை ரூ.30,000- ஆக அதிகரித்துள்ளது.

பிரதமா் சூா்யா கா் யோஜனாவின் கீழ் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு மத்திய அரசு ரூ.78,000 மானியம் வழங்குகிறது.

சோலாா் பேனல்களுக்கான நிறுவல் கட்டணத்தில் மக்கள் எளிதாகக் கடன்களைப் பெறுவதற்காக அரசு வங்கிகளுடன் கூட்டணி வைக்கும். மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து எந்தப் பணத்தையும் செலவிட வேண்டியதில்லை.

மேலும், இந்த வகையில் மக்கள் மாதத்திற்கு ரூ.4,200 வரை மிச்சப்படுத்துவாா்கள் என்று அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க