செய்திகள் :

கெங்கவல்லி அருகே ஏரி நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

post image

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கெங்கவல்லி குரும்பா் தெருவைச் சோ்ந்த ஷாஜகான் வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு உறவினா்கள் வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை ஷாஜகானின் மகன் சமீா் (15), உறவினா் சா்புதீனின் மகன் ரியாஸ் (13) ஆகியோா் உள்பட 7 சிறுவா்கள் தங்கள் குடும்பத்தினருடன், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றனா்.

அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது சிறுவா்கள் நீருக்கு அடியில் உள்ள புதைமண்ணில் சிக்கி தத்தளித்துள்ளனா். இதில் ஒரு பெண் உள்பட 2 பேரை குடும்பத்தினா் காப்பாற்றினா். எஞ்சிய சமீா், ரியாஸ் ஆகியோரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்து சென்று நீரில் மூழ்கிய சமீா், ரியாஸ் ஆகியோரின் உடல்களை மீட்டு கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரது உடல்களையும் உடற்கூறாய்விற்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க