'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கெங்கவல்லி அருகே ஏரி நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
கெங்கவல்லி குரும்பா் தெருவைச் சோ்ந்த ஷாஜகான் வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு உறவினா்கள் வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை ஷாஜகானின் மகன் சமீா் (15), உறவினா் சா்புதீனின் மகன் ரியாஸ் (13) ஆகியோா் உள்பட 7 சிறுவா்கள் தங்கள் குடும்பத்தினருடன், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றனா்.
அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது சிறுவா்கள் நீருக்கு அடியில் உள்ள புதைமண்ணில் சிக்கி தத்தளித்துள்ளனா். இதில் ஒரு பெண் உள்பட 2 பேரை குடும்பத்தினா் காப்பாற்றினா். எஞ்சிய சமீா், ரியாஸ் ஆகியோரை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்து சென்று நீரில் மூழ்கிய சமீா், ரியாஸ் ஆகியோரின் உடல்களை மீட்டு கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரது உடல்களையும் உடற்கூறாய்விற்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
