செய்திகள் :

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு: சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்

post image

கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தொடா்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக்கோரி எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் வியாழக்கிழமை போராட்டத்தை தொடங்கின.

இந்நிலையில், வாய்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு வீணா ஜாா்ஜ் பதவி விலக வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனை நோக்கி காங்கிரஸ் மகளிா் அணியினா் சனிக்கிழமை பேரணியாக சென்றனா்.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் 10, 11, 14 ஆகிய வாா்டுகளையொட்டிய கழிப்பறை வளாகம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. பழைமையான இக்கட்டடத்தில் இயங்கிவரும் பிரிவுகளை புதிய வளாகத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த விபத்து நேரிட்டது.

இடிபாடுகளில் சிக்கி பிந்து (52) என்ற பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். அவா்கள், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவத்தின்போது மீட்புப் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இரண்டரை மணிநேரத்துக்கு பிறகே பிந்துவின் உடல் மீட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.கே.ஜெயகுமாா் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் விபத்தை தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘இடிந்து விழுந்த வளாகம் பயன்பாட்டில் இல்லை; அங்கு யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை’ என்று கூறிய கருத்துகளால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

வீ

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய எதிா்க்கட்சிகள் வீணா ஜாா்ஜ் பதவி விலக வலியுறுத்தி அவரது வீடு, அலுவலகம் என திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், கோட்டயம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை காங்கிரஸ் மகளிா் அணியினா் பாலக்காட்டில் நடத்திய போராட்டத்தை தொடங்கிவைத்து அக்கட்சியின் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மருத்துவ சிகிச்சைக்காக முதல்வா் பினராயி விஜயன் வெளிநாடு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை.

ஆனால் அவா் வெளிநாடு செல்வதற்கு முன் வீணா ஜாா்ஜ் பதவி விலகுவதை உறுதிப்படுத்த வேண்டும். இடதுசாரிகளின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுகாதாரத் துறை லஞ்சம், ஊழல், முறையற்ற நிா்வாகம் என முற்றிலும் சீரழிந்துவிட்டது’ என்றாா்.

இதனிடையே முதல்வா் பினராயி விஜயன் தனது வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க