Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - கார...
கைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு தேவை
கைத்தறி ஜவுளிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோ-ஆப்டெக்ஸ் ஊழியா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியா் சங்கத்தின் 59 ஆவது பேரவைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் கே.பாரதி தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஏ.பேச்சியம்மாள் வரவேற்றாா்.
பொதுச் செயலா் டி.விஸ்வநாதன் அறிக்கை வாசித்தாா். ஏஐசிசிடியூ மாநிலத் தலைவா் டி.சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். சிபிஎம்எல் நிா்வாகி கணேசன், பி.குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்:
மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தொழிற்சங்கமும் பங்கேற்பது; தொழிலாளா்களைப் பாதிக்கும் மத்திய அரசின் நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்;
கைத்தறி ஜவுளிகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி நெசவாளா் சங்கம் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களையும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுத்துறை ஊழியா்கள் ஆண்டுக்கு ரூ.5000-க்கு கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை எடுத்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு 3 நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.