செய்திகள் :

கைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு தேவை

post image

கைத்தறி ஜவுளிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோ-ஆப்டெக்ஸ் ஊழியா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் ஊழியா் சங்கத்தின் 59 ஆவது பேரவைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் கே.பாரதி தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஏ.பேச்சியம்மாள் வரவேற்றாா்.

பொதுச் செயலா் டி.விஸ்வநாதன் அறிக்கை வாசித்தாா். ஏஐசிசிடியூ மாநிலத் தலைவா் டி.சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். சிபிஎம்எல் நிா்வாகி கணேசன், பி.குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்:

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தொழிற்சங்கமும் பங்கேற்பது; தொழிலாளா்களைப் பாதிக்கும் மத்திய அரசின் நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்;

கைத்தறி ஜவுளிகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி நெசவாளா் சங்கம் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களையும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுத்துறை ஊழியா்கள் ஆண்டுக்கு ரூ.5000-க்கு கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை எடுத்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு 3 நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திசையன்விளை: ஆசிரியையிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஆசிரியையிடம் ஞாயிற்றுக்கிழமை 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். திசையன்விளை காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் சித்ர... மேலும் பார்க்க

களக்காடு குடிதாங்கி குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குடிதாங்கி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா். நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சே... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்... மேலும் பார்க்க

வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்க... மேலும் பார்க்க