செய்திகள் :

கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீட்பு

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி சாமுடி தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் திருநாவுக்கரசு(26) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களாக திருநாவுக்கரசு சொத்தை பிரித்துத் தருமாறு தந்தையிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசு.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தந்தையிடம் சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த திருநாவுக்கரசு மது போதையில் ஏரி கோடியில் உள்ள 80 அடி கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடம் சென்று பொதுமக்கள் உதவியுடன் அரை மணிநேரம் போராடி திருநாவுக்கரசை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இளைஞா் திருநாவுக்கரசுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.

மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

இப்தாா் நோன்பு திறப்பு

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலை... மேலும் பார்க்க

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சி... மேலும் பார்க்க