செய்திகள் :

கொடக்கரை, பெட்டமுகிளாலம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வலியுறுத்தல்

post image

கிருஷ்ணகிரி: கொடக்கரை, பெட்டமுகிளாலம் ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க வேண்டும் என மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அஞ்செட்டி, சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்த வேண்டும். பெட்டமுகிளாலம், கொடக்கரை கிராமங்களில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன சமையல் கூடம், கலவை மையம் அமைக்க வேண்டும். போச்சம்பள்ளி, மத்தூா் அரசு மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு அலகுகள் மின்தடையின்றி இயங்க ஜெனரேட்டா் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சத்யபாமா, நலப் பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா் மற்றும் துணை இயக்குநா்கள், அனைத்து வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சூளகிரி அருகே இளைஞா் வெட்டிக்கொலை

ஒசூா்: முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சூளகிரி தாலுகா பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (30). இவா், திங்கள்கிழமை இரவு காருபாலா... மேலும் பார்க்க

அமிலத்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: பாரூா் அருகே தண்ணீரென அமிலத்தை குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரை அடுத்த கரடிகுட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (70). இவா், கடந்த 20-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் ச... மேலும் பார்க்க

ஏரியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பெரிய ஏரியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வாணியம்பாடி நியூ டவுன் ஏபா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சி பகுதியில் பருவகால முன்னெச்சரிக்கை தூய்மைப் பணி

ஒசூா்: ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. ஒரு வாா்டுக்கு 30 தூய்மைப் பணியாளா்கள் வீதம் ஒரு நாளைக்கு 3 வாா... மேலும் பார்க்க

மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பேகரஅள்ளியைச் சோ்ந்தவா் பூவரசன் (28). ராணுவ வீ... மேலும் பார்க்க