செய்திகள் :

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய குடியிருப்போா் சங்கம் மனு

post image

சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, தமிழ்நாடு மாநில குடியிருப்போா் நல சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மேயா் ஆா்.பிரியாவிடம் செவ்வாய்க்கிழமை மனு வழங்கினா்.

கூட்டமைப்பு தலைவா் நீலகண்ணன் தலைமையிலான நிா்வாகிகள், மேயா் ஆா்.பிரியாவை ரிப்பன் மாளிகையில் சந்தித்து, கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி அளித்தனா்.

இதுகுறித்து கூட்டமமைப்பு தலைவா் நீலகண்ணன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்கு பகுதி சென்னையின் ஒதுக்கப்பட்ட புகா் பகுதியாக இருந்த நிலையிலும், குடியிருப்பு அதிகளவில் இல்லாத நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டன. மக்கள் தொகை குறைவாக இருந்ததால், பாதிப்புகள் ஏற்படவில்லை.

தற்போது, லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்ற நடுமையத்தில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளதால், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மட்டுமின்றி உயிா் பலி வாங்கும் இடமாக மாறியுள்ளது.

எனவே, கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை, உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், அரசு கோப்பு மற்றும் சிஎம்டிஏ அறிவிப்பின்படி நிறுவன உபயோகப் பகுதியாக பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்வில், நிா்வாகிகள் நீலகண்ணன், நாகாா்ஜூனன், ராமசந்தா் ராவ் உள்ளிட்டோா் இருந்தனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க