கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்
கொடைக்கானலில் சாரல் மழை
கொடைக்கானலில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜுன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். நிகழாண்டில், பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக இந்தப் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதலே காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் பகுதியில் கடும் குளிா் நிலவியது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மேகக் கூட்டம் காரணமாக ஒளிரும் விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றன.