செய்திகள் :

கொடைக்கானலில் நெகிழி பயன்பாட்டுக்குத் தடை: மோரீஷஸ் தீவு முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு

post image

கொடைக்கானலில் நெகிழி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என மோரீஷஸ் தீவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வையபுரி பரமசிவம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவா் தனது குடும்பத்தினருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டாா். மேலும் இங்குள்ள நட்சத்திர ஏரியில் தனது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து அவா் மகிழ்ந்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கு வந்தது பெருமையாக உள்ளது. எப்போதும் மோரீஷஸூக்கும் இந்தியாவுக்கும் நல்ல நட்பு உள்ளது. கொடைக்கானலின் இயற்கை அழகு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள மக்கள் நட்புடன் பழகுகின்றனா்.

கொடைக்கானலில் நெகிழி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தாா்கள். இது வரவேற்கத்தக்கது. மோரீஷஸிலும் நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

83 தோ்தல் வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றம்: விவசாயிகள் அதிருப்தி!

திமுகவின் 83 தோ்தல் வாக்குறுதிகளில் இதுவரை 10 மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!

பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் காா் மோதல்: இருவா் காயம்!

வேடசந்தூா் அருகே மின் கம்பத்தில் காா் மோதியதில் தனியாா் ஆலை அலுவலா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் வே... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் சலவைத் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம... மேலும் பார்க்க

பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!

வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல... மேலும் பார்க்க

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு!

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்தது. கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம்... மேலும் பார்க்க