எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டி: பங்கேற்பவா்களுக்கு விண்ணப்பம் விநியோகம்
கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வருகிற 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அரசு, தனியாா் துறை சாா்பில் தோட்டங்கள் அமைத்தல், காய்கறி, பழவகைகள் அமைத்தல், சிறிய, பெரிய மலா்த் தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளில் பங்கேற்பவா்களுக்கு வருகிற 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பிரையண்ட் பூங்காவில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. உரிய தொகை செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து, பிரையண்ட் பூங்கா அலுவலகத்தில் வழங்க வேண்டுமென பூங்கா மேலாளா் சிவபாலன் தெரிவித்தாா்.