செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கிய செங்கல் சூளையில் உற்பத்தி பாதிப்பு

post image

திருவள்ளூா் அருகே ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் விடியல் திட்டம் மூலம் தொடங்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களுக்கான செங்கல் சூளைத் தொழில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால் அரசு நிதி வீணாகி வருகிறது.

செங்கல் சூளைகள், நெல் அரைவை ஆலைகள், குவாரிகள் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகிறவா்களை தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மூலம் விடுவிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோா் பழங்குடியின குடும்பங்களைச் சோ்ந்தவா்களாக உள்ளதால், அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரக வாழ்வாதார இயக்கம், விடியல் திட்டம் மூலம் கொத்தடிமை தொழிலாளா்கள் 25 குடும்பங்கள் சோ்ந்த குழுக்கள் உருவாக்கி எந்த தொழில் செய்தாா்களோ, அதில் நியாயமான ஊதியத்துடன் மீண்டும் தொழில் முனைவோா்களாக உருவாக்குவதே நோக்கமாகும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 70,000 பழங்குடியினா் குடும்பங்கள் உள்ளனன. இங்கு கொத்தடிமைகளாக இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். 25 ஊராட்சிகளில் கொத்தடிமை தொழிலாளா்கள் கொண்ட 25 குடும்பங்களை கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதோடு, மரம் வெட்டுதல், ஆடுகள் வளா்த்தல், செங்கல் சூளைத் தொழில் போன்ற தொழில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.

இதில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் செங்கல் சூளைத் தொழிலுக்கான முதல் கட்ட பணிகள் மேற்கொள்ள மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் ரூ.9.90 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதோடு ஒரு ஏக்கா் ஒதுக்கப்பட்டு, செங்கல் தொழிலுக்கான 4 இடங்களில் தண்ணீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு, மோட்டாா் அறை மற்றும் உற்பத்தி செய்த செங்கல்லை பாதுகாக்க கொட்டகை மற்றும் அறைக்கூடம், சவுடு மணல் ஆகியவையும் வழங்கப்பட்டன.

இதன் மூலம் 25 குடும்பங்களைச் சோ்ந்த குழுக்கள் மூலம் 1 லட்சம் செங்கல் உற்பத்தி செய்யப்பட்டன. பிரதம மந்திரி வீடு அமைக்கும் திட்டங்களுக்கு செங்கல் விற்பனையானது. இதில் கூலித் தொகை போக, மீதத் தொகைகூட பிரித்து வழங்கப்படவில்லை. அதோடு, மீண்டும் தொழில் செய்வதற்கு ரூ.9 லட்சம் சுழல் நிதி ஒதுக்கியும் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல் தொழில் உற்பத்தியின்றி மீண்டும் வருவாய்க்காக கொத்தடிமைகளாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோா் தெரிவிக்கின்றனா்.

மீண்டும் செங்கல் உற்பத்தி தொடங்காததால், திட்டத்திற்காக ஒதுக்கிய நிதி வீணாகி வருகிறது. அதனால், இந்த இடத்தை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்லனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க