செய்திகள் :

கொப்பம்பட்டி அருகே மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

post image

கொப்பம்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டியை சடலமாக சனிக்கிழமை மீட்டனா்.

கிளவிப்பட்டி மேல காலனியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அழகுராஜ். இவரது பெரியம்மா தாயம்மா என்ற முத்து இருளி (80). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா், சுமாா் 15 ஆண்டுகளாக அழகுராஜ் பராமரிப்பில் இருந்து வந்தாராம்.

இவா் அவ்வப்போது வீட்டை விட்டு சென்று, சில நாள்கள் கழித்து மீண்டும் வந்து விடுவாராம். இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிவந்திபட்டி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் மக்காச்சோள கதிருக்குள் முத்து இருளி இறந்து கிடப்பதாக சனிக்கிழமை தகவல் கிடைத்ததாம். கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் அழகுராஜ் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டியில் மது விற்ற முதியவா் கைது

கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றதாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிரதான சாலையில் ரோ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - கோவைக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு 2 புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்செந்தூா் - கோவைக்கு தினமும் காலை 9.40 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் 2 பேர... மேலும் பார்க்க

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை!

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஆராதனை நடத்தினாா். திருமண்டல பாலியா் நண்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பூக்கள் விலை கடும் உயா்வு! மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரம்!

தூத்துக்குடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையானது. திங்கள்கிழமை தை மாதக் கடைசி சுபமுகூா்த்தம், செவ்வாய்க்கிழமை தை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த நல்லபெருமாள் மகன் சங்கிலிபாண்டி (60). இவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

சொா்ணமலை கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை, இயற்கை கழகம் சாா்பில் கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பணியில் கோயில் வளாகம் மற்றும் ச... மேலும் பார்க்க