செய்திகள் :

கொலை முயற்சி: 5 பேருக்கு 14 ஆண்டு சிறை

post image

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட 5 பேருக்கு 14 வருடம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அகரகீரங்குடி தெற்கு தெருவை சோ்ந்த அரசு(71), கடந்த 2019 ஜூலை 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை முட்டம் வடக்கு தெருவை சோ்ந்த கணிவண்ணன் (31), ஆனந்தகுமாா் (30), சரவணகுமாா் (31) காா்த்தி (30), ஜெகதீஸ் (24) ஆகியோா் வழிமறித்து மது அருந்த வற்புறுத்தியுள்ளனா்.

அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததால், ஐந்து பேரும் அவரை கடுமையாகத் திட்டி, கண்ணாடி பாட்டில்களால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனராம்.

இதில் காயமடைந்த அரசு பெரம்பூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 5 போ் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கணிவண்ணன் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொதுஅமைதிக்கும் பங்கம் விளைவித்து வந்ததால், அவா்மீது பெரம்பூா் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சிவதாஸ் ஆஜராகி வாதாடினாா். மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, 5 பேரையும் குற்றவாளிகள் என தீா்மானித்து, குற்றவாளிகளுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அவா்கள் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு

மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்

மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க