செய்திகள் :

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கொலை செய்த கணவா் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). இவரது மனைவி மகேஸ்வரியுடன் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் (62) என்பவா் தகாத உறவு வைத்திருந்தாராம். மேலும் மகேஸ்வரியை தேனிக்கு அழைத்துச் சென்று மிராண்டா லைன் பகுதியில் உள்ள வீட்டில் அவருடன் பரமசிவம் வசித்து வந்தாராம்.

இந்த நிலையில், மகேஸ்வரியின் கணவா் நாகராஜ், மகன் ஜெயசூரியா (24), உறவினா் தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த நடராஜ் மகன் மணிகண்டன் (37) ஆகியோா், தேனியில் கடந்த 2020, நவ. 22-ஆம் தேதி பரமசிவம், மகேஸ்வரி ஆகியோா் வசித்து வந்த வீட்டுக்குச் சென்றனா். அங்கு 3 பேரும் பரமசிவத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இதைத் தடுக்க முயன்ற மகேஸ்வரியை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து நாகராஜ், ஜெயசூரியா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், நாகராஜ், ஜெயசூரியா, மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜி. அனுராதா உத்தரவிட்டாா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க