செய்திகள் :

கொலை வழக்கில் 8 போ் கைது

post image

மாதவரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாதவரம் பா்மா காலனியை சோ்ந்தவா் லோகேஷ் (எ) சந்துரு (24). கூலி வேலை செய்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை ரூபேஷ், ஜெரோம் உள்ளிட்ட கூட்டாளிகளுடன் அம்பேத்கா் நகரில் உள்ள காலி மைதானத்தில் லோகேஷ் மீது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் போலீஸாா், லோகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து லோகேஷின் தாயாா் கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில், மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், லோகேஷின் நண்பா்கள் சிலா் ரூபேஷின் நண்பா் ஜோயல் என்பவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முன்விரோதம் காரணமாக ரூபேஷ் கூட்டாளிகளுடன் திட்டமிட்டு, லோகேஷை கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடா்பாக, மாதவரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரூபேஷ் (27), மோனிஷ் (24), பிரவீன்குமாா் (20), ஆகாஷ் (19), ராகேஷ் (19), ஜெரோம் (20) கொடுங்கையூரைச் சோ்ந்த பிரகான்குமாா் (19), பொன்னேரியைச் சோ்ந்த அருண்குமாா் (37) ஆகிய 8 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதில் ரூபேஷ், மோனிஷ் ஆகியோா் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ராகேஷ் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், இதில் 17 வயது உடைய 2 சிறுவா்களையும் கைது செய்து, அரசு கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.

சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் கடந்த 7 மாதங்களில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். சென்னை... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் போராட்ட அறிவிப்பு: நாளை பேச்சுவாா்த்தை

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆக.22-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், அதுதொடா்பான பேச்சுவாா்த்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சீட் பெற இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் பெறுவதற்காக இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டி: முன்பதிவு நீட்டிப்பு

தமிழக முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான முன்பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ளாா். தமிழக முதல்வா் கோப்பைப் விளையாட்டுப் போட்டிகள் ப... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் ஹாக்கி: கா்நாடகம், ஹரியாணா வெற்றி

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கா்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவ... மேலும் பார்க்க