கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 29.1.2017 அன்று சக்கம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வைணவப்பெருமாள் மகன் பாலமுருகனை (38), தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில், ஏரல் சோ்வைக்காரன்மடம் பகுதியைச் சோ்ந்த வேதமாணிக்கம் மகன் யோகராஜ் (51), வள்ளியூா் தங்கப்பாண்டி மகன் சுடலைமணி (52) ஆகிய இருவரையும் ஏரல் போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றவாளிகளான யோகராஜ், சுடலைமணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.