செய்திகள் :

கொல்லிமலை ஒன்றிய கிராமங்களில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. ஆய்வு

post image

கொல்லிமலை மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட போடாமல்பட்டி, தாதாண்டிப்பட்டி, பள்ளிக்காட்டுப்பட்டி, நத்தக்குழிப்பட்டி ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை பிற்பகல் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை சரக மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளா் கோபி, மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் அவருடன் சென்று மலைப்பகுதிகளில் ஆய்வு நடத்தினா்.

மேலும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து, அவா்கள் தற்போது எந்த வகையான தொழில் செய்கிறாா்கள், அவா்களது மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திருந்தியமைக்காக அரசால் வழங்கப்படும் நிவாரணம் பெற்றனரா உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா்.

மேலும், அங்குள்ள பழங்குடியின மக்களிடம் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், காய்ச்சுவோா், விற்பனை செய்வோா் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க