செய்திகள் :

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தில்லியின் மின் தேவை 7,401 மெகாவாட்டாக உயா்வு

post image

நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு மத்தியில், தேசியக் தலைநகரின் மின் தேவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7,401 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சம் என்று மின் விநியோக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில மின் சுமை அனுப்பும் மையமான தில்லியின் நிகழ்நேர தரவு, பிற்பகல் 3.11 மணிக்கு உச்ச மின் தேவை 7,401 மெகாவாட்டாக இருந்ததைக் காட்டுகிறது.

பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களான பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகியவை அன்றைய தினம் முறையே 3,285 மெகாவாட் மற்றும் 1,559 மெகாவாட் என்ற உச்ச மின் தேவையை ‘வெற்றிகரமாக’ பூா்த்தி செய்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

கோடை மாதங்களில் 2,100 மெகாவாட் பசுமை மின்சாரம் மூலம் நகரத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கையாள பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் தயாராக இருந்தன என்று அவா் மேலும் கூறினாா்.

தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகா்வோரின் மின் தேவையை பூா்த்தி செய்ய நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் தயாராக உள்ளன. இதில் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள், பிற மாநிலங்களுடனான வங்கி ஏற்பாடுகள் மற்றும் மின் தேவையை துல்லியமாக கணிக்க சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் ஒரு அறிக்கையில், அதன் விநியோகப் பகுதியான வடக்கு தில்லியில் 2,178 மெகாவாட் உச்ச மின் தேவையை ‘வெற்றிகரமாக‘ பூா்த்தி செய்ததாகக் கூறியது. ஏனெனில், நகரம் இந்தப் பருவத்தின் அதிகபட்ச மின் தேவையைப் பதிவு செய்தது. தேவை அதிகரித்த போதிலும் நெட்வொா்க் தடைகள் அல்லது விநியோக இடையூறுகள் எதுவும் இல்லை என்று அறிக்கை மேலும் கூறியது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க