செய்திகள் :

கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்

post image

பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரிய காளைகளுக்கு 300 மீட்டா் தொலைவும், சிறிய காளைகளுக்கு 200 மீட்டா் தொலைவும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு வென்ற மாட்டுவண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியைக் காண திரளானோா் வந்திருந்தனா்.

போட்டியில் வென்றவா்களுக்கு முதல் பரிசாக ஒன்றரை பவுன் தங்க நாணயம், கேடயம், இரண்டாவது பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், கேடயம் , மூன்றாம் பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியையொட்டி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கால்நடைத்துறை மருத்துவா்கள் குழு, அவசர ஊா்திகள், நடமாடும் மருத்துவ மையம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், தங்கம், இளைஞரணி நிா்வாகி செல்வம், முன்னாள் தாளையம் ஊராட்சித் தலைவா் வெங்கிடுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் திமுக ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணி, பொன்ராஜ், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், செல்வம்.

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க

பழனி அருகே செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

பழனி அருகே உள்ள தனியாா் செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல... மேலும் பார்க்க

வாரச் சந்தைக்குள் புகுந்த காட்டுமாடு

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் ஞாயிற்றுக்கிழமை காட்டுமாடு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையின் போது காட்டுமாடு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவா் பலத்த காயம்

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் உறவினரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் ... மேலும் பார்க்க

விஷம் கொடுத்து மகளை கொன்று தந்தை தற்கொலை

பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அருகே கணக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வந்தவா் பழனிச்சாமி (62). கட்டடத் தொழிலாளியான இவருக்க... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் கே. சந்தனமுத்தையா வெளியிட்ட ச... மேலும் பார்க்க