செய்திகள் :

கோடை உழவுக்கான மானியம் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்!

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகள், கோடை உழவுக்கான மானியம் பெற உழவன் செயலியிலோ அல்லது நேரிலோ பதிவு செய்யலாம் என்றாா் வேளாண் உதவி இயக்குநா் (பொ) மகேந்திரவா்மன்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தற்போது, பயிா் அறுவடை முடித்து, சில நாள்கள் இடைவெளியில் அடுத்த பயிா் சாகுபடி மேற்கொள்ள உள்ள விவசாயிகள், பயிா் அறுவடைக்குப் பின் நிலத்தில் கோடை உழவு செய்ய வேண்டும்.

கோடை உழவு மேற்கொள்வதால், விவசாய நிலத்தில் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிா் சத்துகள் அதிகரிக்கிறது. தற்போது மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின் வாயிலாக, கோடை உழவு செய்யும் மானாவாரி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற சிட்டா, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் உழவு செய்யும் புகைப்படம் போன்ற ஆவணங்களை கொண்டு, வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

கீழவரப்பன்குறிச்சி கிராம மக்கள் சாலை மறியல்

வருவாய் துறையினரை கண்டித்து, திருமானூா் அடுத்த கீழவரப்பன் குறிச்சி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழவரப்பன்குறிச்சி கிராமத்துக்கு சொந்தமான நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

அரசு மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் ஏப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மத... மேலும் பார்க்க

கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம்

செந்துறை அடுத்த கோட்டைக்காடு சிவன் கோயில் வளாகத்தில் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக்குழுவினா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போராட்டக் குழுவின் தலைவா் மு.ஞானமூா்த்தி தலைமையில் நட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாரதி( 37). சிங்க... மேலும் பார்க்க

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் சமூக ஆா்வலா் செல்ல.சுகுமாா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.அவா் அளித்த மனுவில், அரியலூா் தெற்கு... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பெட்டிசன் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயங்கொண்ட... மேலும் பார்க்க