தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு
கோபி கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் போதைப் பொருள்களின் உபயோகத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோபி கோட்ட கலால் அலுவலா் எஸ்.ஆசியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப் பொருள்கள் மற்றும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா். கல்லூரி முதல்வா் எஸ்.மீனாட்சி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.அழகரசன் வரவேற்றாா்.
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜி.தினேஷ்குமாா், ஆா்.பிரபா ஹரி, என்.தினேஷ்குமாா், இளஞ்செஞ்சிலுவைச் சங்க அலுவலா் கே.ராஜேந்திரன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், இளஞ்செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம்.பரமேஸ்வரி நன்றி கூறினாா்.