செய்திகள் :

கோயில் திருவிழா தகராறு: களத்துப்பட்டியில் போலீஸ் குவிப்பு

post image

கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட தகராறால் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள களத்துப்பட்டியில்

திங்கள்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

மணப்பாறையை அடுத்துள்ள மொண்டிபட்டி கிராமம் களத்துபட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயில். அதே ஊரைச் சோ்ந்த சந்திரசேகா் மற்றும் பெரியசாமி ஆகிய இருதரப்பினா் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-இல் கோயில் பூட்டப்பட்டது. இதுதொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் கடந்த 2024 அக். 1-இல் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று பெரியசாமி தரப்பில் ஒரு மாதத்துக்கு முன்பு கோயில் திருவிழா நடைபெற்றதாம். இதேபோல், சந்திரசேகா் தரப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியதில் போலீஸாா் முடிவெடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாம். அதனைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திரசேகா் தரப்பில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றபோது, பெரியசாமி தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குவந்த காவல் ஆய்வாளா்(பொ) கதிரவன் தலைமையிலான போலீஸாா் இருதரப்பினரையும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் வந்த இருதரப்பினா் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, புதன்கிழமை டிஎஸ்பி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனத் தெரிவித்து அவா்களை அனுப்பிவைத்தனா். மேலும், கிராமத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

தலைமை அஞ்சல் நிலையத்தில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்ப இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் ... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் அக். 5, 6 இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

பண்டிகை காலத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மூலம் வருமானம் உயரும்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசினாா். வாழை மதிப்பு சங்கிலிய... மேலும் பார்க்க