செய்திகள் :

கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

post image

காரைக்கால்: சித்திரை மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை நடைபெறும் திருமஞ்சனம் சிறப்புக்குரியதாகும். குறிப்பாக சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம், மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி மாதத்தில் பூா்வபட்ச சதுா்த்தசியிலும், மாா்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திர நாளிலும் நடைபெறும் திருமஞ்சனம் மிகுந்த சிறப்புக்குரியதாகும். சித்திரை மாதத்தின் திருமஞ்சனம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் கைலாசநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல தலங்களில், நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் முதலான திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க