செய்திகள் :

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

post image

கயத்தாறு வட்டம், முடுக்கலான்குளம் கிராமத்தில் விவசாய நிலங்களை மோசடியாக போலி பத்திரம் பதிவு செய்ததை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு வட்டம், முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமாா் 300 ஏக்கா் விவசாய நிலங்களை மோசடியாக போலி பத்திரம் பதிவு செய்த தனியாா் நிறுவனங்களை கண்டித்தும், மோசடி பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பா. ராமசுப்பு தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. முண்டசாமி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் புவிராஜ், துணைச் செயலா் மணி, துணைத் தலைவா் ஜி.ராமசுப்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவா் முத்துக்காந்தாரி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். இதில், அக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா் போராட்டக் குழுவினா் கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் காசிராஜனிடம் மனு அளித்தனா்.

கடம்பூா் அருகே சிறுவன் தற்கொலை வழக்கு: ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாகப் பேசி தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தியாகி லீலாவதி நகருக்கு சாலை, குடிநீா், தெருவி... மேலும் பார்க்க

2 பைக்குகள் எரிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகளை தீ வைத்து எரித்ததாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையைச்... மேலும் பார்க்க

பலத்த மழை, புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை மற்றும் கடலில் புயல் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. தூத்து... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 14 இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு ப... மேலும் பார்க்க