செய்திகள் :

கோவில்பட்டி கோயிலில் மாங்கனித் திருவிழா

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் மாங்கனித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாா், இறைவன் அருளால் அதிமதுர மாங்கனியைப் பெற்று அதைத் தனது கணவருக்கு தந்ததாக கூறப்படும் நாளே மாங்கனித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் 63 நாயன்மாா்கள் சந்நிதியில் உள்ள காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சந்தனம் உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு மாங்கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, அறங்காவலா் திருப்பதிராஜா, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் 216 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை அப்பா் அடிமை கண்ணுச்சாமி சிவா தொண்டா்கள், பிரதோஷம் (குழாம்) - கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க