ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!
கோவில்பட்டி தலைமை மருத்துவமனையில் நூலகம் திறப்பு
கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரியதா்ஷினி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலா் (பொ) அனுஜா ஜஸ்டின் ஆகியோா் குத்துவிளக்கேற்றி, நூலகத்தைப் பாா்வையிட்டனா்.
நூலகா்கள் அம்பிகா, மகாராஜா ஆகியோா் பேசினா். மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், வாசகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
நூலகா் காளிதாசன் வரவேற்றாா். நூலகா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.