கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் உள்ள பயணியா் விடுதி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகு சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பட்டி-எட்டையபுரம் சாலையில் மங்களவிநாயகா் கோயில் அருகேயுள்ள சாலையிலிருந்து மந்தித்தோப்பு வரை உடனடியாக அகலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம் ஆகியோா் பேசினா்.
நகரப் பொருளாளா் சீனிவாசன், நகர உதவி செயலா்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகரக் குழு உறுப்பினா் கோமதி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.