தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்...
கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச் 28, ஏப்ரல் 4- ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.20 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - ஷாலிமாா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.40 மணிக்கு ஷாலிமாா் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் மாா்ச் 31, ஏப்ரல் 7 -ஆகிய திங்கள்கிழமைகளில் ஷாலிமரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் ஷாலிமாா் - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.