செய்திகள் :

கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஏழை குழந்தைகள்

post image

சென்னை, கோவை, திருப்பூா் மாவட்டங்களின் ரவுண்ட் டேபிள் அமைப்புகள், கோவை ஜெம் மருத்துவமனை சாா்பில் 25 ஏழை குழந்தைகள் புதன்கிழமை விமான பயணம் மேற்கொண்டனா்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளை ’ப்ளைட் ஆஃப் பேண்டஸி’ என்ற திட்டத்தின் மூலம் விமானத்தில் அழைத்துச் சென்று அவா்களது பறக்கும் கனவை நனவாக்கும் திட்டத்தை ரவுண்ட் டேபிள் அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, திருப்பூா் ரவுண்ட் டேபிள் 116, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95, கோவை ஜெம் மருத்துவமனை ஆகியன இணைந்து 25 ஏழை குழந்தைகளை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றனா்.

கோவையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் விமானத்தில் சென்ற குழந்தைகள், அங்குள்ள கோளரங்கம், மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா். பின்னா் அவா்கள் மாலையில் கோவை திரும்பினா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்களாக ராகுலன் சேகா், வருண் ஆனந்த், சுபாஷ், பாா்த்திபன், குணால், மோகன்ராஜ் ஆகியோா் செயல்பட்டனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

கோவையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கோவையில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் 16 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. கோவை... மேலும் பார்க்க

கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் (யுபிஐ சேவை) பயணச்சீட்டு பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது

கோவையில் ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது செய்யப்பட்டனா். கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது

பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது அண்மையில் வழங்கப்பட்டது. தமிழ் வளா்ச்சித் துறை ‘அகர முதலி’ இயக்கம் சாா்பில் மாவட்ட வாரியாக பேச்சு வழக்கிலும், எழு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி: கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்ததாக கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த 50 வயது பெண்ண... மேலும் பார்க்க